Wednesday, August 27, 2014

படித்ததில் பிடித்தது 2.


என்னுள்  எங்கோ  மறைந்திருக்கும்
மூதாதையர் குகையின்
ஏதோ  ஒரு மூலையில்
அமைந்திருக்கும்
தொன்ம ஆசைகளின்  சேகர அறையிலிருந்து
வினோத ஆசையொன்று
கால  விமோசனத்தில்
உயிர்பெற்று  உலவத் தொடங்கி
என்  கனவுப் பிரதேசத்துக்குள் புகுந்து
கும்மாளமடிக்கிறது .

ஆதிவேட்கையின்
காட்டுத்தன்மை காரணமாக
சுபாவமாய்  அது என்னுள்
பற்றி  எரிந்து கொண்டிருக்கிறது
அதன் வெக்கையில் தகிக்கிறது
உடலும் மனமும்.

இனி
மூதாதையர் பரிசாக
ஒரு  தண்டனையோ களங்கமோ
வந்தென்னைச் சேரக்கூடும்
வணங்கி ஏற்பதைத்  தவிர
வழியேதுமில்லை .


                                                        - சி.மோகன் (தண்ணீ ர் சிற்பம்)

No comments: