Thursday, December 18, 2014

ஆசை விதைகளில்
பழங்களாக
காத்திருக்கும்
வலிகளும் 
இயலாமையும் 

Tuesday, December 9, 2014

மங்கை மணாளன்
மனம்புக
இரண்டே வழிகள்
சொன்னால் கோபித்துக்கொள்ளும்
பெண்ணியம்
காலம் கனியட்டும்
கருணை அன்பு
காதல் காமம்
சிலந்தி இழையாய்
இடைவெளியில்
அர்த்தங்களை
அனர்த்தமாக்க

Saturday, November 15, 2014

Thursday, November 13, 2014

வளைவுகளில்
விரல்கள் ஊர
உன் பெயர் என்ன
காதில் கிசுகிசுத்தான்
அவளும் கிசுகிசுத்தாள்
உனக்கு என்ன பெயர்
பிடிக்குமோ அதையே
வைத்துக்கொள்
இதுவும் கடந்து போகும்

Monday, November 10, 2014

காமத்தில்
மனம் பேதலிக்க
பயத்தில்
நல்லவர்களாய்

Saturday, November 8, 2014

தத்வமஸி
நீ, அது
வேத மஹா வாக்கியம்
குழப்பமில்லை

நீயே அதுவா
அதுதான் நீயா

நீயும் அதுவும்  இரண்டல்ல
அதுவும் நீயும் வெவ்வேறு
நீ, அதுவாக மற்றொன்றின்
தயை ஆக மூன்று

சங்கரர், மாத்துவர் மற்றும் இராமானுஜர்
குழப்பவாதிகள்

குழப்பமில்லாமல் தெளிவில்லை

 இரண்டல்ல, வெவ்வேறு மற்றொன்று
எம் மார்க்கம் உண்மை அறிய
சிந்திக்க ஆரம்பி
மூன்று பிறவியாவது ஆகாலாம்

முடிவு கொண்டபின் வழி நட
எதோ ஒரு பிறவியில்
சித்தித்க்கலாம் 



Friday, November 7, 2014

அதிலிருந்து
இதுவந்ததா
இல்லை இதிலிருந்து
அதிலிருந்து
இது வந்ததா
காதலும்
காமமும்
அந்த இடத்தில்
உனக்கு எது உகந்ததோ
காரியம் நடத்து அதை வைத்து
ஆதலினால் கா... செய்வீர்

Thursday, November 6, 2014

இயலாமைகளின்
எச்சங்களை
ஏற்றுக்கொள்ள
பழகுவதாய்
வாழ்க்கை
தோன்றியதை
சொல்லிவைத்தேன்
தரம் பிரிப்பது
உன் கடன்
காமத்தில் இருந்தது
கடவுள் வரை
காட்டும் கண்கள்
மெலிதான சோகம்
பேசும் கண்கள்
மட்டும் மனம்
புகுந்தது
மாயம் செய்யும்கவிதையாய்
லக்ஷ்மி லக்ஷ்மி
என்று  அழைத்துக்கொண்டே
இருந்தேன்
கேட்டும் பாரமல்
இருவரும் 
அவன் சொன்னான்
அவளும் சொன்னாள்
சோகத்தில் இருவர்

Wednesday, November 5, 2014

ஒரு புத்தகம்
சிறிதளவு விஸ்கி
மெல்லிய இசை
இதுகூடவா பேராசை
ஏமாற்றமே மிஞ்ச 
ஓ அந்த
மகிழ்ச்சியான
நாட்கள்

இவையும்
நிகழ்காலமாய்
இருந்தவை தானே
காதலில்
இனித்த முத்தம்
மணம் முடிந்ததும்
கடமையானதேன்

Sunday, November 2, 2014

நான் நகுலனில்லை
இருவரிக்கவிதையில்
ஞான ப்பொருள் உரைத்து
சிந்த்திக்க வைக்க

நாலு வரி உளறல்களிரிந்து
நகுலனை நோக்கி பயனிக்ககிறேன்

குடியரசானோம்
விடுதலை பெற்றோமா
வெள்ளியாய்ரிடத்தில்
சக மனிதர்கள்

Saturday, November 1, 2014

வாங்குபவரும்
விற்ப்பவரும்
ஒத்துக்கொள்ளும்
நிலை விலையென்று
கற் றுக்கொடுக்கிறது
பொருளாதாரக் கோட்பாடு

சுக்கிரப் பெண்ணே நீ
மட்டும் ஏன்
பழிக்கப்படுகிறாய்
ஆண்கள் மன்னிக்கப்
படும்போது 


Sunday, October 19, 2014

என் கூட்டில்
ஆயிரம்
வேதனை எனினும்
உன் மீதான காமம்
புத்தம் அறிய
வைத்தது 

Sunday, September 21, 2014

கருப்பொருள் மனம்
புகுந்து
தாய்மையின் அவஸ்தை
கூட
தமிழ் தாய்
கருணை கொண்டு
சீர் தழைக்க
வருமாம் கவிதை

கவிதையென்ன
வணிகனிடம்பா
கேட்டு வாங்க
சில்லறை வணிகமா

Monday, September 1, 2014

காதல்
ஒரு முறை தான்
வருமா
காலம்
பொருள்
வாய்ப்பு
இவை தான் தீர்மானிக்கிறது
அடுத்தமுறை உன்
நியாய தராசால்
நிருக்குமுன்
ஐயம் கொள் .

Saturday, August 30, 2014

கூடிக்களித்தலும்
தீராத்தனிமையும்
செல்வந்தராதலும்
வறுமையில் வாட்டுவித்தலும்
ஒன்றாலேயே என்று உணர்

இதில் ஏது
என் குற்றம்
 ஆண்களின் கண்கள்
 உடை அவிழ்த்துப்பார்க்க
கேட்டா வாங்கிவந்தேன்
இவ்வுடம்பை


Friday, August 29, 2014

தொழில்

இரண்டு நாள் முன்
கந்து வட்டிக்கு வாங்கி
களிமண் பதம் சேர்த்து
இரவெல்லாம் கண் விழித்து
பிள்ளையார் பிடித்து
வண்ண வண்ண கோடை செய்து
எருக்களை மாலையுடன்
விடியல் முதல்
வழி பார்த்து
மனையுடன் வருபருடன்
பேரம் பேசி
போட்ட முதல் தேறுமா
என்றிருக்க

இரவெல்லாம் குடித்து
வேசியுடன் புணர்ந்து
மெதுவாய் கண் விழித்து
அவசரமாய்  குளி த்து
விநாயகர் அகவல்  சொல்லி
மனையுடன் கூட்டதில் சேர்ந்து
நாலாவது தேறுமா
என்று கணக்கு போட்டான்
கைபேசி திருடுபவன் .

                                 -    பயணி

Wednesday, August 27, 2014

படித்ததில் பிடித்தது 2.


என்னுள்  எங்கோ  மறைந்திருக்கும்
மூதாதையர் குகையின்
ஏதோ  ஒரு மூலையில்
அமைந்திருக்கும்
தொன்ம ஆசைகளின்  சேகர அறையிலிருந்து
வினோத ஆசையொன்று
கால  விமோசனத்தில்
உயிர்பெற்று  உலவத் தொடங்கி
என்  கனவுப் பிரதேசத்துக்குள் புகுந்து
கும்மாளமடிக்கிறது .

ஆதிவேட்கையின்
காட்டுத்தன்மை காரணமாக
சுபாவமாய்  அது என்னுள்
பற்றி  எரிந்து கொண்டிருக்கிறது
அதன் வெக்கையில் தகிக்கிறது
உடலும் மனமும்.

இனி
மூதாதையர் பரிசாக
ஒரு  தண்டனையோ களங்கமோ
வந்தென்னைச் சேரக்கூடும்
வணங்கி ஏற்பதைத்  தவிர
வழியேதுமில்லை .


                                                        - சி.மோகன் (தண்ணீ ர் சிற்பம்)