Wednesday, March 1, 2017

காலப் பெருவெளியில்
கரைந்துகொண்டிருக்கிறது
அவளின் பெருங்காமம்
பொருள் தேடச் சென்றவனின்
குருதியில்
நீர்த்துக் கிடக்கிறது
காமத்தின் வலி

எதுகுறித்தும் பேசாமல்
உருள்கிறது பூமி
காமத்துக்கு
ஆயுள் எழுதும்
மருந்துகள் இதுவரை இல்லை!
                              - நாச்சியாள் சுகந்தி

No comments: