கடைசிவரை எல்லா
ஆண்பெண் விளையாட்டும்,
வயிற்றுக்கும் மனத்துக்குமான
இழுபறிதான் இடையில்
இந்த மூளை விடுகிற
வெற்றுச்சவால்களும்,
ஆடத்தூண்டுகிற
பகடையாட்டங்களும், எந்தச்
சூதாடியும் நிஜத்தில் தோற்று,
கனவில் ஜெயித்து, நிறுத்த
முடியாத ஆட்டத்த்தில்
நிலைகுலைகிறான்.
தோற்றவன் கண்களில்
ஜெயித்தவனைவிட ஜெயம்
மட்டுமே அதிகம்
மினுங்குகிறது.
- வண்ணதாசன்
ஆண்பெண் விளையாட்டும்,
வயிற்றுக்கும் மனத்துக்குமான
இழுபறிதான் இடையில்
இந்த மூளை விடுகிற
வெற்றுச்சவால்களும்,
ஆடத்தூண்டுகிற
பகடையாட்டங்களும், எந்தச்
சூதாடியும் நிஜத்தில் தோற்று,
கனவில் ஜெயித்து, நிறுத்த
முடியாத ஆட்டத்த்தில்
நிலைகுலைகிறான்.
தோற்றவன் கண்களில்
ஜெயித்தவனைவிட ஜெயம்
மட்டுமே அதிகம்
மினுங்குகிறது.
- வண்ணதாசன்

No comments:
Post a Comment